follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுஇங்கிலாந்துப் பெண்ணின் மேன்முறையீட்டு மனு நீதிமன்றால் நிராகரிப்பு

இங்கிலாந்துப் பெண்ணின் மேன்முறையீட்டு மனு நீதிமன்றால் நிராகரிப்பு

Published on

இலங்கையிலிருந்து தன்னை நாடு கடத்த எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி இங்கிலாந்துப்பெண் விடுத்த கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இலங்கையில் இருந்து இங்கிலாந்துப்பெண்ணை வெளியேற்ற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்தை செல்லுப்படியற்றது என உத்தரவிடுமாறு கோரி இங்கிலாந்துப்  பிரஜையான ஸ்கொட்லாந்து யுவதி கெலின் பிரேஷர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

இந்நிலையில், குறித்த மனுவை இன்று (16) மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் நடந்த விடயங்களை குறித்த இங்கிலாந்துப் பெண் சமூக வலைத்தளங்களில் நேரலையில் பதிவேற்றியமை தொடர்பில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள விசா அனுமதியை இரத்துச் செய்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இம் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

“அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” – நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்குமாறு பணிப்புரை

நாட்டில் முஸ்லிம் மக்களுக்காக அளப்பரிய சேவைகளையாற்றிய தலைசிறந்த அரசியல்வாதியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம்...

ஊழல் ஒழிப்பை அரசியல் கோசமாகக் பயன்படுத்தும் யுகம் முடிவுக்கு வரும்

அரசாங்கம் திருடர்களைப் பாதுகாப்பதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் தற்போதைய அரசாங்கம் திருடர்களைப் பிடிப்பதற்காக சட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் ஊழல்...

மழையுடனான காலநிலை – ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. களு கங்கை மற்றும் வளவ கங்கை...