follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடு8 மீனவர்கள் கைது

8 மீனவர்கள் கைது

Published on

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 6 படகும் 8 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை அதிகரித்திருப்பதாகவும் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என மீனவர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கொழும்பில் இருந்து வருகைதந்த விசேட அணியும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளும் கடற்படையும் இணைந்து நேற்று (15) இரவு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதன்போது முல்லைத்தீவு கடலில் தடைசெய்யப்பட்ட கடற்தொழில் நடவடிக்கையில் ஒன்றான கடலுக்குள் ஒளிபாச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கொக்கிளாய் கடற்பரப்பில் மூன்று படகுகளும், மாத்தளன் கடற்பரப்பில் ஒரு படகும், வலைஞர்மடம் கடற்பகுதியில் இரண்டு படகுகளும் என மொத்தமாக 6 படகுகளுடன் 8 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

கைதுசெய்யப்பட்ட நபர்களையும் சான்று பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...