follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடு8 மீனவர்கள் கைது

8 மீனவர்கள் கைது

Published on

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 6 படகும் 8 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை அதிகரித்திருப்பதாகவும் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என மீனவர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கொழும்பில் இருந்து வருகைதந்த விசேட அணியும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளும் கடற்படையும் இணைந்து நேற்று (15) இரவு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதன்போது முல்லைத்தீவு கடலில் தடைசெய்யப்பட்ட கடற்தொழில் நடவடிக்கையில் ஒன்றான கடலுக்குள் ஒளிபாச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கொக்கிளாய் கடற்பரப்பில் மூன்று படகுகளும், மாத்தளன் கடற்பரப்பில் ஒரு படகும், வலைஞர்மடம் கடற்பகுதியில் இரண்டு படகுகளும் என மொத்தமாக 6 படகுகளுடன் 8 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

கைதுசெய்யப்பட்ட நபர்களையும் சான்று பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...