8 மீனவர்கள் கைது

398

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 6 படகும் 8 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை அதிகரித்திருப்பதாகவும் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என மீனவர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கொழும்பில் இருந்து வருகைதந்த விசேட அணியும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளும் கடற்படையும் இணைந்து நேற்று (15) இரவு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதன்போது முல்லைத்தீவு கடலில் தடைசெய்யப்பட்ட கடற்தொழில் நடவடிக்கையில் ஒன்றான கடலுக்குள் ஒளிபாச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கொக்கிளாய் கடற்பரப்பில் மூன்று படகுகளும், மாத்தளன் கடற்பரப்பில் ஒரு படகும், வலைஞர்மடம் கடற்பகுதியில் இரண்டு படகுகளும் என மொத்தமாக 6 படகுகளுடன் 8 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

கைதுசெய்யப்பட்ட நபர்களையும் சான்று பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here