follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஇலங்கையை உன்னிப்பாக அவதானிக்கிறோம்!

இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கிறோம்!

Published on

இலங்கையில் நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எமது அயல் நாடான இலங்கையில் நடப்பவை, இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் எந்த வளர்ச்சியாக இருந்தாலும் நாங்கள் மிக கவனமாக அவதானித்து வருகின்றோம் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் இலங்கைக்கு வந்துள்ள நிலையில், பதில் நடவடிக்கையாக இந்தியா ராமேஸ்வரம் பகுதியில் தனது கடற்படையினரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதுடன் கண்காணிப்புகளையும் அதிகரித்துள்ளது.

மேலும் இந்திய கடற்படையின் உலங்குவானூர்திகள் இலங்கையின் வடக்கில் அமைந்துள்ள இந்தியாவின் தென் பகுதி கடல் எல்லையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

 

LATEST NEWS

MORE ARTICLES

பெரிய வெங்காயத்தின் மொத்த விலை குறைந்தது

சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 50 ரூபாவினால் குறைந்துள்ளது. இதனால் வெங்காய இறக்குமதியாளர்கள் பெரும் சிரமத்திற்கு...

ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தனர்

ஈரானிய ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண கவர்னர் மாலெக் ரஹ்மதி உட்பட ஹெலிகாப்டரில் இருந்த...

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் வலுப்பெறுகிறது

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும்...