தோட்டப்புற மக்களுக்காக ஒன்லைன் முறையின் கீழ் வைத்திய சேவைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள புதிய கிராமபுற அபிவிருத்தி அதிகாரசபையினால் செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி பதுளை, இதழ்கஸ்ஹின்னவத்த கிராமத்தினை மையமாகக் கொண்டு இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் பத்தரமுல்லை, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில் நேற்று (16) தோட்டப்புற வீடமைப்பு பிரிவின் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் தோட்டப்புற வீடமைப்பு பிரிவின் கீழ் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த அமைப்பு, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி பொறுப்புச்சபை, புதிய கிராமபுற அபிவிருத்தி அதிகாரசபை போன்ற நிறுவனங்கள்ஆகியவை அதற்காக செயற்படவுள்ளது.