அலரி மாளிகைக்குள் சேதம் ஏற்படுத்தியவர்களை அடையாளம் காட்டுங்கள்!

335

கடந்த 09-07-2022 அன்று அலரி மாளிகைக்குள் உட்புகுந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேக நபர்களை கைதுசெய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

கொழும்பு தெற்குப் பிரிவின் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவே பொதுமக்களிடம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளது.

சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல்கள் தெரியும் பட்சத்தில் 0112 421 867, 0763 477 342, 1997 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here