follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஅடக்குமுறையை பிரயோகிப்பது நாட்டிற்கு ஆபத்து!- லக்ஷ்மன் கிரியல்ல

அடக்குமுறையை பிரயோகிப்பது நாட்டிற்கு ஆபத்து!- லக்ஷ்மன் கிரியல்ல

Published on

அமைதி வழி போராட்டங்கள் மீது அடக்குமுறையை பிரயோகிப்பதானது நாட்டுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் செயற்பாடு என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொதுவான கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயக ரீதியில் அமைதியாக போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் தாக்குதல் மேற்கொள்வதானது அப்பட்டமான அடக்குமுறை என்று இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச உதவிகளுக்காக காத்திருக்கும் நேரத்தில் இவ்வாறான அடாவடித்தனங்களில் ஈடுபடுவது நாட்டிற்கு கிடைக்கவிருக்கும் உதவிகளை தடுக்கும் செயற்பாடு எனவும், சர்வதேச சட்டத்தை மீறி நாட்டு மக்களை மேலும் நெருக்கடியில் தள்ளும் வேலையினையினையே ஆட்சியாளர்கள் மேற்கொள்கின்றார்கள் எனவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...