follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஅடக்குமுறையை பிரயோகிப்பது நாட்டிற்கு ஆபத்து!- லக்ஷ்மன் கிரியல்ல

அடக்குமுறையை பிரயோகிப்பது நாட்டிற்கு ஆபத்து!- லக்ஷ்மன் கிரியல்ல

Published on

அமைதி வழி போராட்டங்கள் மீது அடக்குமுறையை பிரயோகிப்பதானது நாட்டுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் செயற்பாடு என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொதுவான கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயக ரீதியில் அமைதியாக போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் தாக்குதல் மேற்கொள்வதானது அப்பட்டமான அடக்குமுறை என்று இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச உதவிகளுக்காக காத்திருக்கும் நேரத்தில் இவ்வாறான அடாவடித்தனங்களில் ஈடுபடுவது நாட்டிற்கு கிடைக்கவிருக்கும் உதவிகளை தடுக்கும் செயற்பாடு எனவும், சர்வதேச சட்டத்தை மீறி நாட்டு மக்களை மேலும் நெருக்கடியில் தள்ளும் வேலையினையினையே ஆட்சியாளர்கள் மேற்கொள்கின்றார்கள் எனவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...