follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஅடக்குமுறையை பிரயோகிப்பது நாட்டிற்கு ஆபத்து!- லக்ஷ்மன் கிரியல்ல

அடக்குமுறையை பிரயோகிப்பது நாட்டிற்கு ஆபத்து!- லக்ஷ்மன் கிரியல்ல

Published on

அமைதி வழி போராட்டங்கள் மீது அடக்குமுறையை பிரயோகிப்பதானது நாட்டுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் செயற்பாடு என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொதுவான கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயக ரீதியில் அமைதியாக போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் தாக்குதல் மேற்கொள்வதானது அப்பட்டமான அடக்குமுறை என்று இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச உதவிகளுக்காக காத்திருக்கும் நேரத்தில் இவ்வாறான அடாவடித்தனங்களில் ஈடுபடுவது நாட்டிற்கு கிடைக்கவிருக்கும் உதவிகளை தடுக்கும் செயற்பாடு எனவும், சர்வதேச சட்டத்தை மீறி நாட்டு மக்களை மேலும் நெருக்கடியில் தள்ளும் வேலையினையினையே ஆட்சியாளர்கள் மேற்கொள்கின்றார்கள் எனவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...