இந்தியாவுடன் நல்லுறவை பேணவே பாகிஸ்தான் விரும்புகிறது!

456

இந்தியாவுடன் ஒற்றுமையாகவும், சமாதானமாகவும் இருப்பதையே பாகிஸ்தான் விரும்புகிறது என அந்நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார்.

பரஸ்பர நம்பிக்கை, நீதி, சமத்துவம் ஆகிய கொள்கைகளின் வழியில் இந்தியாவுடன் அமைதியான உறவு ஏற்படுவதை பாகிஸ்தான் விரும்புகிறது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் மற்றும் காஷ்மீர் மக்களின் விருப்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காணப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தெற்காசியா பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்பட இந்தியா, பாகிஸ்தான் இடையே நல்லுறவு நிலவுவது அவசியமானது என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here