follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுதுலாஞ்சனி பிரேமதாஸவிடம் வாக்குமூலம் பெற்ற சிஐடி!

துலாஞ்சனி பிரேமதாஸவிடம் வாக்குமூலம் பெற்ற சிஐடி!

Published on

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் சகோதரியான துலாஞ்சனி பிரேமதாஸவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நேற்று வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதற்கமைய அவரிடம் சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் சகோதரியான துலாஞ்சனி பிரேமதாஸ, தமக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதாக குறிப்பிட்டார்.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தமக்கு தொடர்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...