துலாஞ்சனி பிரேமதாஸவிடம் வாக்குமூலம் பெற்ற சிஐடி!

526
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் சகோதரியான துலாஞ்சனி பிரேமதாஸவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நேற்று வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதற்கமைய அவரிடம் சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் சகோதரியான துலாஞ்சனி பிரேமதாஸ, தமக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதாக குறிப்பிட்டார்.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தமக்கு தொடர்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here