கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

559

நேற்று முன்தினம் நாட்டில் 06 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட இரு ஆண்களும் பெண் ஒருவரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த மற்ற மூவரும் 60 வயதுக்கு மேற்பட்ட மூன்று பெண்களாவர்.

இதேவேளை, இன்று மேலும் 103 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 669,136 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here