follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமலையக சிறுவர்களை பணிக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும் - வி.இராதாகிருஸ்ணன்

மலையக சிறுவர்களை பணிக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும் – வி.இராதாகிருஸ்ணன்

Published on

மலையக சிறுவர்களை பணிக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும் எனவும் இந்த விடயம் தொடர்பில் பெற்றோர் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஸ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வருடம் ஜூலை மாதம் மரணமடைந்த சிறுமி ஹிசாலினியின் துயரம் நிறைவடைவதற்கு முன்னால் மற்றுமொரு இழப்பு தற்போது ஏற்பட்டுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட பகுதிகளில் நிலவுகின்ற வறுமையே இவ்வாறான மரணங்களுக்கு காரணம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இடைத்தரகர்கள் தங்களுடைய இலாபத்திற்காக இவ்வாறான சிறுவர்களை வெளிமாவட்டங்களுக்கு கொண்டு சென்ற விற்பனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு இடைத்தரகர்களாக செயற்படுகின்றவர்களை இனம் கண்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் மலையக இளைஞர் யுவதிகள் இந்த விடயத்தில் பொறுப்பாக செயற்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கம்பஹா பகுதியில் உள்ள வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மஸ்கெலிய சிறுமியின் இறுதிக் கிரியை நேற்று இடம்பெற்றது.

குறித்த சிறுமி நீச்சல் தடாகத்தில் நீரில் மூழ்கியமையாலையே மரணித்தததாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...