follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபிரதேச சபை உறுப்பினரை தாக்கிய யுவதி கைது!

பிரதேச சபை உறுப்பினரை தாக்கிய யுவதி கைது!

Published on

பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை தாக்கி பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி அம்பலாங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து தாக்கி காயப்படுத்தி, அவரது பணப்பையை திருடி அந்த உறுப்பினரை பெரே வாவியில் தள்ளியதாக குறித்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் நேற்று (22) பிற்பகல் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, மே மாதம் 9ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்தவின் வீடு மற்றும் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தி அசம்பாவிதம் செய்த சந்தேகநபர் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கடுவெல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...