follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1நாட்டில் கொவிட் தடுப்பூசிகளில் இரண்டு டோஸ்களை பெற்றவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை கடந்தது

நாட்டில் கொவிட் தடுப்பூசிகளில் இரண்டு டோஸ்களை பெற்றவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை கடந்தது

Published on

நாட்டில் இதுவரை இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டோரின் எண்ணிக்கை 10 மில்லியனை கடந்துள்ளது.

நேற்று(09) வரையிலான தரவுகளின் படி 10,211,537 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 870 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 2 இலட்சத்து ஆயிரத்து 834 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்;டதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

9 ஆயிரத்து 778 பேருக்கு அஸ்ட்ராசெனகா முதலாம் தடுப்பூசியும், 669 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன. 13 ஆயிரத்து 40 பேருக்கு மொடெர்னா இரண்டாம் தடுப்பூசியும், 30 பேருக்கு முதலாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

அதேவேளை 14 ஆயிரத்து 279 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 507 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

ஸ்புட்னிக்-வி முதலாம் தடுப்பூசி ஒருவருக்கு செலுத்தப்பட்டதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்...