follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடு”ஹால் சமீர” கைது

”ஹால் சமீர” கைது

Published on

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரான ”ஹால் சமீர” என அழைக்கப்படும் வர்ணகுலசூரிய கிரிஸ்டெபூகே சமீர சம்பத் பெர்னாண்டோ, பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது  சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், அரிசி உற்பத்தியாளர்களிடமிருந்து பெருமளவிலான அரிசி தொகையை சேகரித்து அந்த பெறுமதிக்கான காசோலையை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான குறித்த சந்தேகநபர், அரிசி மோசடி உள்ளிட்ட நிதி மோசடிகளுடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படுகின்றார்.

சந்தேகநபருடைய வீட்டை சோதனையிட்டபோது இத்தாலி மற்றும் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மினுவாங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...

வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து வேலைத்திட்டம்

2025 வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர். அகில இலங்கை பௌத்த மகா...

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன்...