follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுவசந்த முதலிகே உள்ளிட்ட மூவரிடம் CID விசாரணை

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரிடம் CID விசாரணை

Published on

90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹஷாந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேசத்துரோக சதிகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் தெரியவந்தால், அவர்கள் மூவரையும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்குமாறு பொலிஸ்மா அதிபரினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

வசந்த முதலிகே, ஹஷாந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (22) அனுமதி வழங்கியிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...