follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமுகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில் ஜோசப் ஸ்டாலின்!

முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில் ஜோசப் ஸ்டாலின்!

Published on

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் இன்று முகத்துவாரம் பொலிஸ் நிலையத்திற்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

ஜூலை 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் கூட்டம் நடத்தியமை மற்றும் கூட்டத்தில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் முகத்துவாரம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக அவர் மீதான வழக்கு நாளை (24) இடம்பெறவுள்ளதால், இது குறித்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிஸார் அவருக்கு அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போதைய அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள் தொடர்வதாகவும், இதுவரை 3,553 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...