follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமுகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில் ஜோசப் ஸ்டாலின்!

முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில் ஜோசப் ஸ்டாலின்!

Published on

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் இன்று முகத்துவாரம் பொலிஸ் நிலையத்திற்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

ஜூலை 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் கூட்டம் நடத்தியமை மற்றும் கூட்டத்தில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் முகத்துவாரம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக அவர் மீதான வழக்கு நாளை (24) இடம்பெறவுள்ளதால், இது குறித்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிஸார் அவருக்கு அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போதைய அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள் தொடர்வதாகவும், இதுவரை 3,553 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...