follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஅனுமதிபெறாத வணிகங்களுக்கு எரிபொருள் இல்லை

அனுமதிபெறாத வணிகங்களுக்கு எரிபொருள் இல்லை

Published on

2100 க்கு அதிகமான வணிகங்கள் தங்களுக்கென சொந்த எரிபொருள் சேமிப்பு தொட்டிகளை அமைத்துள்ளதாகவும் மற்றும் பலவற்றை அனுமதியின்றியும் அமைத்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவு ஒன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உரிமம் இல்லாத மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்காத வணிகங்களுக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளை விநியோகிக்காது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், 1250க்கும் அதிகமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், அத்தியாவசிய நுகர்வோருக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஏற்றுமதி வணிகங்கள் எரிபொருளுகான கொடுப்பனவுகளை அமெரிக்க டொலரில் செலுத்த வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், வணிக நிறுவனங்களுக்கு பெற்றோல் வழங்கப்படாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...