follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமே 09 தாக்குதல் : பெண் ஒருவருக்கு விளக்கமறியல்!

மே 09 தாக்குதல் : பெண் ஒருவருக்கு விளக்கமறியல்!

Published on

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களை கொம்பனித்தெருவில் பேர வாவிக்குள் தள்ளிவிட்டதாகக் கூறப்படும் பெண்ணை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரை அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு மீண்டும் திரும்பியவர்களை, பேர வாவிக்குள் தள்ளிவிட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போதே கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேகநபரை கைது செய்திருந்தனர்.

சந்தேகநபர் தொடர்பான அடையாள அணிவகுப்பு இன்று நடைபெறவிருந்த நிலையில், சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் அந்த நடவடிக்கை பிற்போடப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...