follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுமே 09 தாக்குதல் : பெண் ஒருவருக்கு விளக்கமறியல்!

மே 09 தாக்குதல் : பெண் ஒருவருக்கு விளக்கமறியல்!

Published on

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களை கொம்பனித்தெருவில் பேர வாவிக்குள் தள்ளிவிட்டதாகக் கூறப்படும் பெண்ணை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரை அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு மீண்டும் திரும்பியவர்களை, பேர வாவிக்குள் தள்ளிவிட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போதே கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேகநபரை கைது செய்திருந்தனர்.

சந்தேகநபர் தொடர்பான அடையாள அணிவகுப்பு இன்று நடைபெறவிருந்த நிலையில், சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் அந்த நடவடிக்கை பிற்போடப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...