follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுமின் துண்டிப்பு கால அளவு குறையும் சாத்தியம்!

மின் துண்டிப்பு கால அளவு குறையும் சாத்தியம்!

Published on

நாளை ஆரம்பமாகவுள்ள வாரத்தில் நாளாந்த மின்துண்டிப்பு கால அளவை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

திடீரென செயலிழந்த நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின், முதலாம் மின்பிறப்பாக்கி மீள ஆரம்பிக்கப்பட்டு, நேற்று தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.

இதன்படி, 300 மெகாவொட் மின்சாரம், தேசிய கட்டமைப்புக்கு இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலாம் மின்பிறப்பாக்கி செயலிழந்தமை மற்றும் இரண்டாம் மின்பிறப்பாக்கியின் சீரமைப்பு பணிகள் காரணமாக, கடந்த 15ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் 3 மணித்தியால மின்தடை அமுலாக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான, பின்னணியில், கருத்து வெளியிட்டுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, மின்தடை அமுலாக்கப்படும் காலம் குறித்து அறியப்படுத்துமாறு மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள இலங்கை மின்சார சபை, மின்துண்டிப்பு கால அளவில் திருத்தம் செய்து விரைவில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

போலி வைத்தியர்கள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சிலர் பல்வேறு...

நாடே எதிர்பார்த்திருந்த ரதுபஸ்வல வழக்கின் தீர்ப்பு வெளியானது

வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள்...

மீனவ மக்களுக்கு ஓர் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து...