தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களின் இழுவை படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவின் நேற்று இரவு, தலைமன்னார் கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டிருந்தபோது, அங்கு சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய இழுவை படகு அவதானிக்கப்பட்டுள்ளது.
அதன்போது, கைதுசெய்யப்பட்ட ஆறு இந்திய மீனவர்களும் தற்போது தலைமன்னார் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.