follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஜனாதிபதி மற்றும் சபாநாயகர் வெளியிட்ட விடயத்தை நினைவூட்டிய சஜித்!

ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் வெளியிட்ட விடயத்தை நினைவூட்டிய சஜித்!

Published on

ஜனாதிபதியும், சபாநாயகரும் குறிப்பிட்டது போன்று அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்),அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) ஆகிய குழுக்களுக்கு தலைவர்கள் எதிர்கட்சியில் இருந்து நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு அப்படியே நடைமுறைப்படுத்தப்படுமா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர், தற்போது நிலைமை வேறுவிதமாக உள்ளதால் அந்த தீர்மானங்களை மாற்றுவதற்கு ஏதாவது ஏற்பாடுகள் உள்ளதா என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவிகளுக்கு இரான் விக்ரமரத்ன மற்றும் கபீர் ஹாசிம் நியமிக்கப்படுவார்களா என்று மீண்டும் ஒருமுறை கேள்வி எழுப்பினார்.

அதேபோன்று, கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்காக நிலையியற் கட்டளைகளில் மாற்றம் கொண்டு வரப்படுமா எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...