எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் குழுவொன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (29) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேற்படி குழுவை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் எரிசக்தி அமைச்சர் யோசனை முன்வைத்தார்.
குறிப்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் பல முன்னாள் எம்.பி.க்கள் எரிபொருளை மிகக் குறைந்த விலையில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய முடியும் என கூறி வருகின்றனர். அந்த வகையில் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், அவ்வாறான குழுவை அமைத்து எதிர்க்கட்சிகளுக்கு வழங்கினால், அதற்குத் தேவையான பூரண ஆதரவு கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார்.