சர்வதேச நாணய நிதியம்(IMF), பாகிஸ்தானுக்கு 1.1 பில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க முன்வந்துள்ளது.
பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்துள்ள பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பெய்துவரும் பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 1,136 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழைக்காலம் ஆரம்பித்தது முதல் கனமழை பெய்து வருகிறது.
கடந்த 3 தசாப்தங்களில் இல்லாத அளவு பாகிஸ்தானிலுள்ள பல பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.