follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஇலங்கையின் ஏனைய கடன் வழங்குநர்களை ஒன்றிணைக்க ஜப்பான் தயார்!

இலங்கையின் ஏனைய கடன் வழங்குநர்களை ஒன்றிணைக்க ஜப்பான் தயார்!

Published on

இலங்கையின் கடன் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர் நாடுகளும் ஒன்றிணைவது அவசியமானது என ஜப்பானிய நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி (Shunichi Suzuki) தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் இலங்கையின் ஏனைய கடன் வழங்குநர் நாடுகளை ஒருங்கிணைக்கும் பணிகளை ஜப்பான் முன்னெடுக்கும் என்றும் இன்று அவர் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைக்கு, தமது பெரிய கடன் வழங்குநர் நாடுகளை ஒன்றிணைக்குமாறு ஜப்பானை இலங்கை கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் ரோய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், முன்னதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி (Yoshimasa Hayashi), அவ்வாறான ஒரு சந்திப்பை நடத்துவதற்கு தமது நாடு இலங்கையுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வில்லை என்று கூறினார்.

“நாங்கள் இலங்கை தரப்புடன் பல்வேறு தொடர்புகளை மேற்கொண்டு வருகிறோம், ஆனால் அத்தகைய பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு எந்த ஏற்பாடும் நடக்கவில்லை” என்று ஹயாஷி இன்று செய்தியாளர் சந்திப்பொன்றில் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...