follow the truth

follow the truth

July, 9, 2025
Homeஉள்நாடுமே 09 வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மேலும் 12 பேர் கைது

மே 09 வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மேலும் 12 பேர் கைது

Published on

கடந்த மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகிக்கப்படும் மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேகாலையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் தாரக்க பாலசூரியவின் வீடு மற்றும் காரியாலயத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் 4 சந்தேகநபர்களை கேகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரோஹித்த அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரது வீடுகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் 58 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எலெஹர பிரதேச சபையின் தவிசாளரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மஹவ்வ – கஹட்டகஸ்திகிலிய பகுதிகளைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்கவின் ஹொரணையிலுள்ள இல்லத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் ஒருவரும் அருந்திக்க பெர்னாண்டோவின் வீடு, மஹர பிரதேச சபை தலைவரின் இல்லத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டிலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...

ஹிங்குராக்கொட விமான நிலையத்தை மேம்படுத்துவது குறித்து அவதானம

ஹிங்குராக்கொட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஓடுபாதையை 2300 மீட்டராக விரிவுபடுத்தும் பணியை முடிக்க...