கடந்த மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகிக்கப்படும் மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேகாலையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் தாரக்க பாலசூரியவின் வீடு மற்றும் காரியாலயத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் 4 சந்தேகநபர்களை கேகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ரோஹித்த அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரது வீடுகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் 58 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எலெஹர பிரதேச சபையின் தவிசாளரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மஹவ்வ – கஹட்டகஸ்திகிலிய பகுதிகளைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்கவின் ஹொரணையிலுள்ள இல்லத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் ஒருவரும் அருந்திக்க பெர்னாண்டோவின் வீடு, மஹர பிரதேச சபை தலைவரின் இல்லத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டிலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.