follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுபோராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 28 பேர் பிணையில் விடுதலை

போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 28 பேர் பிணையில் விடுதலை

Published on

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 28 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் சில செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருதானை – டெக்னிக்கல் சந்தி பகுதியில் நேற்று மாலை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தினை கலைப்பதற்கு பொலிஸாரினால் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தனர்.

இதன்காரணமாக பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன், 28 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...