follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுமரண தண்டனை முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை!

மரண தண்டனை முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை!

Published on

மரண தண்டனையை அமுல்படுத்துவதில்லை என அரசாங்கம் எடுத்துள்ள கொள்கை முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 04 பிரதிவாதிகளுக்கு மரணதண்டனை வழங்குவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஆம் ஆண்டு தீர்மானம் எடுத்திருந்தார்.

இந்த தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (31) உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

விஜித் மலல்கொட, எல்.டி.பி. தெஹிதெனிய மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற குழு முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் சார்ப்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...