follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுஇலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை குறித்த முக்கிய அறிவிப்பு

இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை குறித்த முக்கிய அறிவிப்பு

Published on

இலங்கையில் 10 பேரில் மூவர், உணவு பாதுகாப்பற்ற நிலையிலுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

05 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் நீரிழிவு போன்ற தொற்றாநோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய நடுத்தர வருமான நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் 05 வயதுக்குட்பட்ட சிறார்களின் போசாக்கின்மை அளவு அதிகமாக இருப்பதாக உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த வயதில் உள்ள குழந்தைகளில் 17 வீதமானோர் வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டுகின்றது.

உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் பிரகாரம், இது மிகவும் மோசமான நிலைமை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சுமார் 1.5 மில்லியன் பேருக்கு அவசர உணவு உதவி தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தால் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்பிற்கமைய, நாட்டில் சுமார் 6.3 மில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பின்றியும் உதவிகளை எதிர்பார்த்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

நாடே எதிர்பார்த்திருந்த ரதுபஸ்வல வழக்கின் தீர்ப்பு வெளியானது

வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள்...

மீனவ மக்களுக்கு ஓர் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து...

முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க SJB உடன் இணைவு

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து...