follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசீமெந்து மற்றும் இரும்பு போன்றவற்றின் விலை குறித்து எதிர்வரும் வாரம் தீர்மானம்

சீமெந்து மற்றும் இரும்பு போன்றவற்றின் விலை குறித்து எதிர்வரும் வாரம் தீர்மானம்

Published on

கைத்தொழில் துறைக்குத் தேவையான சீமெந்து, இரும்பு போன்ற மூலப்பொருட்களின் விலை தொடர்பில் நிலவும் பிரச்சினையை தீர்க்க எதிர்வரும் வாரத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்புக் குழுவின் இரண்டாவது கூட்டம் இன்று நடைபெற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்குவது மிகவும் முக்கியம் என்றும் நாட்டில் உற்பத்தியை உயர்த்தி தன்னிறைவு நிலையை உருவாக்கி உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கை வரலாற்றில் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை அரிசி தட்டுப்பாடு நிலவுவதாகவும் உணவு இருப்பு வைத்து நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...