follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுIMF உடன்படிக்கை குறித்து ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

IMF உடன்படிக்கை குறித்து ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை எட்டுவது மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கான சான்றாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை வரலாற்றில் இந்த உடன்படிக்கை ஒரு முக்கியமான படியாகும் எனவும், வங்குரோத்து நிலை மற்றும் கடனை செலுத்துவதில் உள்ள சிரமம் போன்றவற்றிலிருந்து விடுபடுவதும் முக்கியமானது எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க “இலங்கையின் வரலாற்றில் ஒரு முக்கியமான படி. நாங்கள் முதல் முறையாக திவால்நிலையை அறிவித்துள்ளோம். தற்போது நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இது ஒரு இன்றியமையாத காரணம். திவால்நிலையிலிருந்து விடுபடுவது மற்றும் சிரமத்திலிருந்து விடுபடுவதும் முக்கியம்.

கடன்களை செலுத்துவது.சமூக-பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க இது சற்று ஆறுதல் அளிக்கிறது. இது ஒரு புதிய பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஆரம்பம் என்று நினைக்கிறேன்.

மிகவும் போட்டி நிறைந்த ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்க நாங்கள் உழைக்கிறோம். சமூக நிலைமைகளை உயர்த்துவதும் நமது பொறுப்பு. ஆரம்பமே கடினமாக இருக்கும். எனினும் மேலும் வளர்ச்சி அடைய முடியும் என்பதை நான் அறிவேன்.

நமது சமூக சேவைப் பணிகளை எளிதாகச் செய்யக்கூடிய வகையில் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு நாம் அனைவரும் ஒத்துப்போக வேண்டும் என்று முழு நாட்டையும் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...