follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉள்நாடுஇடைக்கால பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று!

இடைக்கால பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று!

Published on

2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.

இடைக்கால பாதீடு, கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பாதீடு மீதான விவாதம், இன்றைய தினம் மூன்றாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது.

இதனிடையே, நேற்று முன்தினம் இடம்பெற்ற பாதீடு மீதான முதலாம் நாள் விவாதத்தின்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் டளஸ் அழகப்பெரும உள்ளிட்ட 13 பேர் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக  அறிவித்து எதிர்த்தரப்பில் அமர்ந்து கொண்டனர்.

இதையடுத்து, நாடாளுமன்றில் எதிர்த்தரப்பில் 109 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்துள்ளதாக,  நாடாளுமன்ற நூலகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

115 பேர் ஆளுந்தரப்பு ஆசனங்களில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், நேற்று முன்தினம் நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இதுவரையில் எதிர்த்தரப்பில் 103 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில், இன்று மாலை விவாதம் நிறைவடைந்ததை அடுத்து, பாதீடு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...