follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுபதுளையில் விபத்து! 10 பெண் தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்

பதுளையில் விபத்து! 10 பெண் தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்

Published on

பதுளை – பசறை – கோணக்கலை காவத்தைப் பகுதியில், உழவு வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில், 10 பெண் தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோணக்கலை தொழிற்சாலையில் பணியாற்றிய பெண் தொழிலாளர்கள், பணி நிறைவுற்றதும் நேற்றிரவு 7 மணி அளவில், தொழிற்சாலை உழவு வண்டியில் தங்களது வீடுகளுக்கு ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.

இதன்போது, காவத்தைத் தோட்டத்திற்கு செல்லும் வழியில், குறித்த உழவு வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தநிலையில் காயமடைந்த 10 பெண் தொழிலாளர்கள், பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், 4 பேர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

LATEST NEWS

MORE ARTICLES

சட்டத்தின் ஆட்சி இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதித்துறையின் முன்னேற்றத்திற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துள்ளார். ஒரு நாட்டுக்கு நீதித்துறை மிகவும் முக்கியமானது...

ஏப்ரலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2024 ஏப்ரல் மாதத்தில் 148,867 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது...

மேலும் 40,000 பேரை இஸ்ரேலில் தொழிலுக்காக அனுப்புவோம்

பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் இஸ்ரேலிய போரை நிறுத்த முடியாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...