follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுஎல்ல ஒடிசி ரயில் சேவை அதிகரிப்பு

எல்ல ஒடிசி ரயில் சேவை அதிகரிப்பு

Published on

எல்ல ஒடிசி ரயிலின் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தற்போதைய சேவைக்கு மேலதிகமாக எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் பிரதி வியாழக்கிழமைகளில் கொழும்பு தொடக்கம் பதுளை வரையிலும் பிரதி வௌ்ளிக்கிழமைகளில் பதுளை தொடக்கம் கொழும்பு வரையிலும் ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

ரயில் சேவை முன்னெடுக்கப்படும் தினத்திலிருந்து 14 நாட்களுக்கு முன்னர் ஆசனங்களை முற்பதிவு செய்து கொள்ள முடியுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரமே எல்ல ஒடிசி ரயில் சேவை முன்னெடுக்கப்படுகின்றது.

LATEST NEWS

MORE ARTICLES

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல...

“ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க சட்டம் இல்லை”

தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தாலும் அதற்கு சட்டரீதியாக சாத்தியமில்லை என பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்...

ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செய்த முறைப்பாட்டின்...