மின்சார சபை தொடர்பான முன்மொழிவுகள் இம்மாத இறுதிக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும்

554

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான பிரதான கட்டமைப்பு இம்மாத இறுதிக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சார சபையின் சீர்திருத்தக் குழுவின் முன்மொழிவுகள் குறித்து இன்று  கலந்துரையாடும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை மின்சார சபையை மறுசீரமைக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்ததோடு அடுத்த வாரம் அரசியல் கட்சிகள் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவையும் சந்திக்கும் எனவும் அமைச்சர் விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here