உயன்வத்தை வாவியின் ராஜகம பகுதிக்கு அருகில் சடலமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அவர் 45-55 வயது மதிக்கத்தக்கவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, உயன்வத்தை ஏரிக்கரையில் இன்று (04) காலை உரிமையாளர் இல்லாத ஆண் ஒருவரின் ஆடைகள் மற்றும் காலணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.
வாவிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அந்த ஆடைகளின் உரிமையாளருடையதாக இருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.