follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசிறுபோகத்திற்கான உர விநியோகம் நிறைவு

சிறுபோகத்திற்கான உர விநியோகம் நிறைவு

Published on

 இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரத்தை விநியோகிக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

2022 சிறுபோகத்திற்காக இவை இறக்குமதி செய்யப்பட்டன.

கடந்த வெள்ளிக்கிழமை வரையில், சிறுபோகத்திற்காக 512,000 ஹெக்டேயர் நிலப்பரவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

304,734 ஹெக்டேயரில் பயிரிட்ட 490,515 விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள யூரியா உரத்தின் மொத்த அளவு 29,740 மெட்ரிக் தொன் ஆகும்.

வட மத்திய மாகாணத்திலேயே அதிகளவு நிலப்பரப்பில் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், வட மத்திய மாகாணத்திற்கு 9,623 மெட்ரிக் தொன் யூரியா உரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தினால் 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

சுமார் 35,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் மீதமுள்ளமையால், அவை பெரும்போகத்தை முன்னிட்டு விநியோகிக்கப்படவுள்ளன.

நெற்செய்கைக்கு மேலதிகமாக சோளம், உருளைக்கிழங்கு மற்றும் தேயிலை செய்கைகளுக்கு யூரியா உரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...