follow the truth

follow the truth

May, 1, 2025
Homeஉள்நாடுஉணவு விலை மாறாது!

உணவு விலை மாறாது!

Published on

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும், உணவு வகைகளின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கு 10 வீதம் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க எமக்கு முடியும். அவ்வாறு செய்தால், எரிவாயு விலை குறைக்கப்பட்டு மறுபுறத்தில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கிறது.  எனவே, உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்கவும் முடியாமல், குறைக்கவும் முடியாமல் பாரிய பிரச்சினை ஏற்படுகிறது.

மரக்கறி ரொட்டி 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், முட்டை ரொட்டி, பராட்டா என்பனவும் 10, 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும். அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து, ஒழுங்குபடுத்தலை ஏற்படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்தால், எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துடனும் இணங்க தாங்கள் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை பயன்படுத்தும் சேவை தாமதம்

அதிவேக நெடுஞ்சாலைகளில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ்...

ஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தி

இலங்கையின் உழைக்கும் மக்கள் உட்பட பொது மக்கள், இந்த முறை இந்நாட்டின் ஊழல் மிக்க, சிறப்புரிமை அரசியலை முடிவுக்குக்...