follow the truth

follow the truth

August, 2, 2025
Homeஉள்நாடுகோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை

கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை

Published on

கோதுமை மா உற்பத்தித் திறனை அதிகரிக்குமாறு பாரியளவிலான கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களிடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னிலையில் இன்று காலை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்காலத்தில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கோதுமை மாவுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிப்பது நடைமுறைச் சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் கேள்வியை பூர்த்தி செய்வதற்கு துருக்கி மற்றும் டுபாயிலிருந்து கோதுமை மா இறக்குமதிசெய்ய அங்குள்ள ஏற்றுமதியாளர்களுடன் பேச்சுவார்த்தைகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தட்டுப்பாடு காரணமாக சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களிலும் கூட கோதுமை மாவின் சில்லறை விலை அதிகரித்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் சில்லறை விலை சில்லறை விலை ரூ. 360 – 380 ஆக காணப்படும் நிலையில் மொத்த விலை 350முதல் 400 ரூபா வரை காணப்படுவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...