follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுபாண் விலை 300 ரூபாவா?

பாண் விலை 300 ரூபாவா?

Published on

சந்தையில் நிலவும் கோதுமை மா தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக பாண் ஒரு இராத்தலின் விலை 300 ரூபா வரை உயரலாம் என ஏற்கனவே பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் அறிவித்திருந்தார்.

ஆனால் இன்று விடயம் தொடர்பான அமைச்சர் நெவில் பெர்ணாண்டோவோடு இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் பாண் விலையை அதிகரிக்காமல் இருக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானத்தித்துள்ளதா அதன் தலைவர் என்.கே ஜயவர்தன அறிவித்துள்ளார்.

அதன் படி இலங்கையின் முன்னணி கோதுமை மா விநியோக நிறுவனங்கள் இரண்டு 50 கிலோ மூட்டை ஒன்றை 13500 ரூபாவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் அறிவித்துள்ளார்.
அத்தோடு நாட்டுக்குள் நிலவும் கோதுமை மா தட்டுப்பாட்டை குறைக்க விரைவில் கோதுமை மா இறக்குமதி செய்யப்படும் என்று அமைச்சர் உறுதி வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் நாட்டுக்குள் கோதுமை மா கருப்பு சந்தை ஒன்று உருவாகியுள்ளது என்றும் அங்கு 13500 ரூபா மூட்டை ஒன்று சுமார் 18500 ரூபா வரைவிற்பனை செய்யப்படுகின்றது என்று பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...