follow the truth

follow the truth

June, 29, 2025
Homeஉள்நாடுஇஸ்லாமிய மற்றும் ஹலால் தொழில்துறையின் மிகப்பெரிய கண்காட்சியில் இலங்கை!

இஸ்லாமிய மற்றும் ஹலால் தொழில்துறையின் மிகப்பெரிய கண்காட்சியில் இலங்கை!

Published on

பி.டி. எக்ஸ்போ ப்ரைட் – ஈ.எப்.எல், பி.டி. அட்வான்டிஸ் அகாசா மற்றும் ஹேலிஸ் அவென்ச்சுரா (பிரைவேட்) லிமிடெட் ஆகிய மூன்று இலங்கை நிறுவனங்கள் ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ´முஸ்லிம் வாழ்க்கை வர்த்தகம் 2022´ கண்காட்சியில் தமது தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளை விளம்பரப்படுத்தின.

2022 ஆகஸ்ட் 26 – 28 வரை இந்தோனேசியாவின் கன்வென்ஷன் கண்காட்சி பி.எஸ்.டி, டாங்கராங், இந்தோனேசியாவில் நடைபெற்ற இந்தக் கண்காட்சி, சுமார் 42,000 பார்வையாளர்களை ஈர்த்தது.

முஸ்லிம் லைஃப் டிரேட் 2022 என்பது இந்தோனேசியாவின் இஸ்லாமிய மற்றும் ஹலால் தொழில்துறையின் மிகப்பெரிய வணிகக் கண்காட்சி ஆகும். பி.டி. லிமா நிகழ்வு இந்தோனேசியாவின் அமைப்பாளராக இந்தோனேசிய இஸ்லாமிய வணிகம் மற்றும் தொழில்முனைவோர் சமூகம் இணைந்து இந்த நிகழ்வை நடாத்தியது.

இந்தக் கண்காட்சியில் எகிப்து, ஈரான், ஜப்பான், மலேசியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் துனிசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச கண்காட்சியாளர்கள் உட்பட 300 கண்காட்சியாளர்கள் கலந்துகொண்டனர்.

பி.டி. எக்ஸ்போ ப்ரைட் – ஈ.எப்.எல். மற்றும் பி.டி. அட்வான்டிஸ் அகாசா ஆகியவை கப்பல் சரக்குப் போக்குவரத்து சேவைகளை ஊக்குவித்ததுடன், ஹேலிஸ் அவென்ச்சுரா (பிரைவேட்) லிமிடெட் தொழில்துறை தயாரிப்புக்களை ஊக்குவித்தது. ஏராளமான வணிக இணைப்புக்களை உருவாக்குவதற்கு வழிவகுத்தமையினால், கண்காட்சியில் தமது பங்கேற்பு வெற்றிகரமாக இருந்ததாக இந்த நிறுவனங்கள் கருதுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

AI பயன்பாடு குறித்து கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கமளிப்பு

அரச சேவையை ஒரு பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது...

டோக்கன் பெறுவது தொடர்பான அறிவித்தல்

எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒருநாள்...

‘Dream Destination’ 100 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கும் பணி ஆரம்பம்

தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை விட, நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்று...