follow the truth

follow the truth

June, 28, 2025
HomeTOP1AI பயன்பாடு குறித்து கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கமளிப்பு

AI பயன்பாடு குறித்து கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கமளிப்பு

Published on

அரச சேவையை ஒரு பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வு இன்று (28) கல்வி அமைச்சில் நடைபெற்றது.

அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமான அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஆரம்ப அணுகுமுறையாக அதிகாரிகளை தெளிவுபடுத்துவதும் மற்றும் தயார்படுத்துவதும் அரச சேவைக்குள் செயற்கை நுண்ணறிவு குறித்த சாதகமான அணுகுமுறையை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும்.

நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் ஊடாக கல்வித் துறையின் தரத்தை காலத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்த முடியும் என்று கூறினார்.

இங்கு ஆரம்ப உரையாற்றிய டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தில் கல்வி அமைச்சின் பங்கு, கல்வி அமைச்சில் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்தலாம் மற்றும் அதற்காக திட்டமிடப்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்து உரையாற்றினார்.

ஜனாதிபதி அலுவலகம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு,கல்வி அமைச்சு மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) ஆகியவை இணைந்து இந்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தன. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபை உறுப்பினர்களான ஹர்ஷ புரசிங்க மற்றும் சமிச அபேசிங்க ஆகியோர் வளவாளர்களாக இணைந்தனர்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டோக்கன் பெறுவது தொடர்பான அறிவித்தல்

எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒருநாள்...

‘Dream Destination’ 100 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கும் பணி ஆரம்பம்

தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை விட, நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்று...

ஜூனில் ஒரு இலட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூன் மாதத்தின் முதல் 26 நாட்களில், 116,469 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி...