காலி கடற்கரையில் காணாமல் போன மூன்று கடற்றொழிலாளர்கள் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால் குறித்த மீனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
காலி மற்றும் களுத்துறை கடற்கரைகளில் படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 கடற்றொழிலாளர்கள் காணாமல் போயிருந்தனர்.