follow the truth

follow the truth

May, 1, 2025
Homeஉள்நாடுஅத்துகோரலவின் மனைவி மற்றும் பிள்ளைகளை சந்தித்த ஜனாதிபதி!

அத்துகோரலவின் மனைவி மற்றும் பிள்ளைகளை சந்தித்த ஜனாதிபதி!

Published on

மே 9 ஆம் திகதி நிட்டம்புவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட உதவிகள் ஏதேனும் இருப்பின் தமக்கு அறிவிக்குமாறும் தெரிவித்தார்.

பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் குடும்ப நலனுக்காகவும் அரசாங்கத்தின் உதவித்தொகையின் கீழ் தனிப்பட்ட ரீதியில் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் சார்பாக எந்தவொரு உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அண்மையில், உயிரிழந்த அமரகீர்த்தி அத்துகோரலவின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் பொலிஸ் சார்ஜன்ட் ஜயந்த குணவர்தனவுக்கும் பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து ஜனாதிபதி நிதியுதவி வழங்கினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...