நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் கைது

430

அண்மையில் நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நபர் ஒருவரை சுட்டுக் கொல்ல முயற்சித்த சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைத்துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த இரண்டு சந்தேக நபர்களும் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மினுவாங்கொடை மற்றும் கலென்பிந்துனுவெவ பிரதேசங்களைச் சேர்ந்த 39.38 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரையும் கைது செய்து விசாரணைக்குட்படுத்திய போது சந்தேகத்தின் பேரில் ஒருவர் நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here