follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடு13 எம்.பிக்களின் கருத்து சுதந்திரம் பறிப்பு?

13 எம்.பிக்களின் கருத்து சுதந்திரம் பறிப்பு?

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து சுயாதீனமாக எதிர்த்தரப்பில் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும உட்பட்ட 13 பேருக்கு நாடாளுமன்றில் கருத்துக்களை வெளியிடுவதற்கு நேரம் ஒதுக்காமை தொடர்பில் இன்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பின.

டளஸ் அழகப்பெரும இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியமையை அடுத்து, அவருக்கு சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் தமது வாதங்களை முன்வைத்தனர்.

இதனையடுத்து கருத்துரைத்த அவை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,

தாம் அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்பட்டதுபோது, தாம் நிதிக்குழுவில் இருந்து விலக்கப்பட்டதாகவும், கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் பறிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

எனினும் தமக்காக எவரும் பேசவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் டளஸ் அழகப்பெரும உட்பட்ட 13 பேரின் பிரச்சினை தொடர்பாக ஆராயப்படும் என்று உறுதியளித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு...

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...