follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுநலன்புரி அனுகூலங்கள் சபைக்கு உறுப்பினர்களை நியமிக்க பாராளுமன்ற பேரவையில் அனுமதி

நலன்புரி அனுகூலங்கள் சபைக்கு உறுப்பினர்களை நியமிக்க பாராளுமன்ற பேரவையில் அனுமதி

Published on

நலன்புரி அனுகூலங்கள் சபைக்கு உறுப்பினர்களை நியமிக்க நிதி அமைச்சரினால் பாராளுமன்ற பேரவைக்கு முன்வைக்கப்பட்டிருந்த முன்மொழிவுளுக்குப் பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய கே.எச்.ஜெசி முலர் மற்றும் கே. துனுசிங்க ஆகியோரை நியமிப்பதற்கு இவ்வாறு அனுமதி கிடைத்திருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

அதேநேரம், தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் காணப்படும் வெற்றிடத்துக்கு ஏ.எம்.நஹியாவை நியமிப்பது தொடர்பான பரிந்துரையை கௌரவ
ஜனாதிபதிக்கு மேற்கொள்வதற்கும் பாராளுமன்றப் பேரவை தீர்மானித்திருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பாராளுமன்றப் பேரவை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நேற்றுக் கூடியபோதே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...