கேகாலையில் விபத்து – மூவர்பலி!

572

கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கேகாலை, ரங்வல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த வான் ஒன்றும், கேகாலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்களும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துல்ஹிரிய மற்றும் வெயங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய மூவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

வேன் சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here